Manu Dharma Sastra (@manudharma) 's Twitter Profile
Manu Dharma Sastra

@manudharma

One of Holy book of Hinduism

ID: 1299953552232574978

calendar_today30-08-2020 06:14:40

96 Tweet

2,2K Followers

2,2K Following

Manu Dharma Sastra (@manudharma) 's Twitter Profile Photo

1:97 பிராமணர்களிலேயும் வித்வான்கள் உயர்ந்தவர்கள். அவர்களிலும் தங்கள் அனுஷ்டானங்களில் புத்தியைச் செலுத்துபவர்கள் உயர்ந்தவர்கள். அவர்களிலும் அத்தகு கர்மானுஷ்டானங்களை நன்கு இயற்றுபவர்கள் உயர்ந்தவர்கள். அவர்களைவிட பிரம்மஞானிகள் உயர்ந்தவர்கள்.

Manu Dharma Sastra (@manudharma) 's Twitter Profile Photo

1:98 பிராமணனுடைய உற்பத்தியே தர்மத்துக்கு சாஸ்வதமான சரீரம். பிராமணன் தர்மத்தை கடைபிடிப்பதற்காகவே படைக்கப்பட்டவன். அத்தகு தர்மத்தை கடைபிடிப்பதனால் பிரம்மபதத்தை அடைவான். 1:99 எல்லா உயிர்களுக்கும் உரிய தர்மமனைத்தையும் காக்கும் தலைவன் காக்கும் தலைவன் பிராமணன்.

Manu Dharma Sastra (@manudharma) 's Twitter Profile Photo

1:100 பூமியிலுள்ள அனைத்தும் பிராமணனுடையது. எனவே பிராமணன் எல்லா செல்வங்களுக்கும் உடைமையாளன். 1:101 பிராமணன் தன்னுடைய செல்வத்தையே தான் அனுபலிக்கிறான். தன்னுடைய ஆடைகளையேதான் உடுத்துகின்றான். தன்னுடைய செல்வத்தையே பிறருக்கு அளிக்கிறான்.

Manu Dharma Sastra (@manudharma) 's Twitter Profile Photo

1:102 ஞானியான ஸ்வாயம்புவ மநு, பிராமணனுடையனவும், மற்றவர்களுடையனவுமான தர்மங்களை தெரிவிப்பதற்காக இந்த தர்ம சாஸ்திரத்தை வழங்கினார்.

Manu Dharma Sastra (@manudharma) 's Twitter Profile Photo

103. இந்த மனு தர்ம சாஸ்திரத்தை படிப்பதனால் அடையும் பலன்களை அறிந்து பிராமணன் இந்த தர்ம சாஸ்திரத்தை நன்கு முயற்சியோடு படிக்க வேண்டும். சிஷ்யர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்.

Manu Dharma Sastra (@manudharma) 's Twitter Profile Photo

1:104 இந்த சாஸ்திரத்தை மிக்க நியமத்தோடு படிக்கும் பிராமணனுக்கு மனத்தாலும் வாக்காலும் உடலாலும் ஏற்படும் எந்த பாபமும் அண்டாது.

Manu Dharma Sastra (@manudharma) 's Twitter Profile Photo

1:105 இந்த சாஸ்திரத்தை படித்து ஓதுபவன் தன்னுடைய முன்னோர்களில் ஏழு தலைமுறையினரையும், தனக்குப் பின் ஏழு தலைமுறையினரையும் புனிதமாக்குகிறேன். இந்தப் பூமண்டலம் முழுவதையும் தானம் பெறுவதற்கும் அருகதையுடையவனாகிறான்.

Manu Dharma Sastra (@manudharma) 's Twitter Profile Photo

1:106 இந்த தர்ம சாஸ்திர அத்யயனம், மநோரதங்களை பூர்த்தியாக்கும். இந்த தர்ம சாஸ்திரம் மிகவும் சிரேஷ்டமானது. ஞானத்தைப் பெருக்குவது, புகழைத் தருவது, தீர்க்காயுளைத் தருவது, மோட்சமடைய மேலான சாதனமானது.

Manu Dharma Sastra (@manudharma) 's Twitter Profile Photo

1:107 இந்த தர்ம சாஸ்திரத்தில் அனைத்து தர்மங்களும், அனைத்து வர்ணத்தாரும் கடைபிடிக்க வேண்டிய ஆசார விஷயங்களும் கூறப்பட்டுள்ளன.

Manu Dharma Sastra (@manudharma) 's Twitter Profile Photo

1:108 வேதங்களிலும் ஸ்மிருதிகளிலும் கூறப்பட்ட ஆச்சாரங்களே மேலான தர்மங்கள். எனவே மக்களின் நலம் கோரும் துவிஜன் ஆசார விஷயங்களில் எப்போதும் முயற்சியுடன் ஈடுபட்டவனாக இருக்க வேண்டும். (பிராமண, க்ஷத்திரிய வைசிய மூன்று வர்ணத்தாரும் துவிஜர்கள்)

Manu Dharma Sastra (@manudharma) 's Twitter Profile Photo

1:109 ஆசாரத்திலிருந்து விலகிய பிராமணனுக்கு வேதாத்யனத்தால் பலன் கிட்டாது. ஆசாரமானவனே சம்பூர்ணமான பலனைப் பெறுவான். ஆசாரம் என்பது தூய்மை. தூய்மையான அனுஷ்டானங்களை, பூஜைகளை தினமும் செய்பவனே ஆசார சீலன்.

Manu Dharma Sastra (@manudharma) 's Twitter Profile Photo

1:110 இவ்வாறாக ஆசாரத்தை ஆதாரமாகக் கொண்டு தர்மம் இருப்பதை உணர்ந்து, எல்லா தவங்களுக்கும் ஆசாரமே முதல் முக்கியமானது என்று முனிவர்கள் தெரிவித்தார்கள்.

Manu Dharma Sastra (@manudharma) 's Twitter Profile Photo

1:111 உலக உற்பத்தியும், ஸம்கார முறைகளும், விரத முறைகளும், பிரம்மச்சரிய விரத முறைகளும் இந்த தர்ம சாஸ்திர நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1:112 விவாஹ முறைகளையும் விவாஹத்துக்கான லட்சணங்களையும், யாகங்களின் லட்சணங்களையும், சிரார்த்த விஷயங்களையும் இந்த தர்ம சாஸ்திரம் கூறுகிறது.

Manu Dharma Sastra (@manudharma) 's Twitter Profile Photo

1:113 ஜீவனம் நடத்துவதற்கான தொழில்களின் லட்சணங்களையும், இல்லறத்தானின் நியமங்களையும், சாப்பிடத்தக்கவை, தகாதவை பற்றியும் மரண காலங்களில் ஏற்படும் தீட்டுக்களைப் பற்றிய விவரங்களையும், பொருட்களுக்கு தண்ணீர் முதலியவற்றால் கிடைக்கும் சுத்தி முறைகள் பற்றியும் இந்த தர்மசாஸ்திரம் கூறுகிறது.

Manu Dharma Sastra (@manudharma) 's Twitter Profile Photo

1:114 பெண்களுக்குரிய தர்ம விஷயங்களும், வான பிரஸ்தர்களுக்குரிய தர்ம விஷயங்களும், மோட்சத்துக்குரிய விஷயங்களும் இந்த தர்ம சாஸ்திரத்தில் விளக்கப்பட்டுள்ளன.

Manu Dharma Sastra (@manudharma) 's Twitter Profile Photo

1:115 சாட்சிகளை விசாரிக்கும் முறைகள், பெண்களும் ஆண்களும் நடந்து கொள்ள வேண்டிய முறைகள், பாகப் பிரிவினை, சூதாட்டம், குற்றவாளிகளைத் தண்டித்தல் முதலான விஷயங்களும் இந்த தர்ம சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளன.

Manu Dharma Sastra (@manudharma) 's Twitter Profile Photo

1:116 வைசியர்கள், சூத்திரர்கள் முதலானோரின் தர்ம அனுஷ்டான முறைகள், கலப்பு திருமணங்கள், ஆபத்துக் காலங்களில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், பிராயச்சித்த முறைகள் முதலான விஷயங்களும் இந்த தர்ம சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளன.

Manu Dharma Sastra (@manudharma) 's Twitter Profile Photo

1:117 தேகத்தை விடுதல், மூன்று வகையான கர்ம வினைகள் ஏற்படுதல், சாஸ்திரத்தில் செய்யச் சொன்ன, செய்யக் கூடாது என்று சொன்ன விஷயங்களின் பலாபலன்கள் முதலானவையும் இந்த தர்ம சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளன.

Manu Dharma Sastra (@manudharma) 's Twitter Profile Photo

1:118 தேச தர்மங்கள், ஜாதி தர்மங்கள், குல தர்மங்கள், வேதத்துக்கு விரோதமானவர்களின் தர்மா தர்மங்கள் முதலானவையும் இந்த தர்ம சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளன.

Manu Dharma Sastra (@manudharma) 's Twitter Profile Photo

1: 119 முனிவர்களே, நான் வினாவிய போது மனுவானவர் எனக்கு இந்த தர்ம சாஸ்திரத்தை எவ்வாறு உபதேசித்தாரோ அவ்வாறே அதை உங்களுக்கு எடுத்துரைக்கிறேன். கேளுங்கள். (முதல் அத்தியாயம் முற்றிற்று)