"அறிதல் என்பது தெரிந்துகொள்வது இல்லை. தேடும் பாதை அது. கிடைத்த விஷயங்களை உள்ளே போட்டுக்கொண்டு இன்னும் எங்கே என்று விரியும் பாதை. கண்ணில் பட்ட முக்கில் உட்கார்ந்துகொள்ளாமல் கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீளும் பாதையில் நடைபோடுவது மேல்."
#தன்மேம்பாடு #சமூகமேம்பாடு #அறிவியல்சிந்தனை
அறிவு இல்லாததால் ஏமாறும் கூட்டத்தை வைத்து வஞ்சபுத்தி உள்ள கயவர்களால் கட்டமைக்கப்படும் ஆணவ பர்னீச்சர்கள் சகாய விலையில் பொளேர் பொளேர் என்று உடைத்துத் தரப்படும்.
- கோபி, சுதாகர் & குழுவினர்
(முழுவீடியோவையும் பார்த்துவிடுங்கள்)
#பயணிதரன்
#வாழ்வெனும்பயணம்
#தன்மேம்பாடு #சமூகமேம்பாடு
நம் செயல்களில் இரண்டே வகை தான்: முடித்தவை, முடிக்காதவை.
இரண்டாவதைப் பற்றி உலகம் அலட்டிக்கொள்வதில்லை.
#பயணிதரன்
#வாழ்வெனும்பயணம்
#தன்மேம்பாடு #சமூகமேம்பாடு #அறிவியல்சிந்தனை
"நிரூபிக்கப்பட்ட உண்மையை வந்தடைவதற்கு முன்பு சில முறை பொய்யின் பின்னால் சுற்றவேண்டியிருக்கிறது."
#பயணிதரன்
#வாழ்வெனும்பயணம்
#தன்மேம்பாடு #சமூகமேம்பாடு #அறிவியல்சிந்தனை
"வெற்று நம்பிக்கையை இழத்தல் முதலில் பயமாக இருக்கலாம். ஆனால், உறுதியான மனதின் மேல் படிந்திருந்த பொய்யான பாசியைக் கழுவும் விஷயம் தான் அது. உறுதி இன்னும் மேம்பட்டுத் துலங்கும்."
#பயணிதரன்
#வாழ்வெனும்பயணம்
#தன்மேம்பாடு #சமூகமேம்பாடு #அறிவியல்சிந்தனை
பயந்தபடி கெட்டது நடந்தால் அதை என்றென்றைக்கும் நினைவில் வைத்திருப்போம். ஆனால் தன்னுறுதியால் வெற்றி கிடைத்தால் விரைவில் மறந்துவிடுவோம். நம் வெற்றிகளின் நினைவுகள் நம் படை பலம். எப்போதும் படை சூழ நடக்கவேண்டும்.
#பயணிதரன்
#வாழ்வெனும்பயணம்
#தன்மேம்பாடு #சமூகமேம்பாடு
கடினச் சூழல்களிலும் ஊக்கத்தை நோக்கி மனம் திருப்புவது தப்பிக்கும் மனநிலை அல்ல. அது தான் போரிடும் மனநிலை.
#பயணிதரன்
#வாழ்வெனும்பயணம்
#தன்மேம்பாடு #சமூகமேம்பாடு
"கேள்வி கேட்காத நம்பிக்கை என்பது நீர் மேல் மிதக்கும் தக்கை. அதற்கு வேர் கிடையாது. சிறு கேள்விக் காற்றுக்கும் அது பதைபதைக்கிறது."
#பயணிதரன்
#வாழ்வெனும்பயணம்
#தன்மேம்பாடு #சமூகமேம்பாடு #அறிவியல்சிந்தனை
"அறிவியல் என்பது சேர்த்த அறிவு அல்ல. அது, அறியும் வழி. சொன்னதை நம்பி வாழாமல் ஆதாரமுள்ள விடைகளைத் தேடும் வழி."
#பயணிதரன்
#வாழ்வெனும்பயணம்
#தன்மேம்பாடு #சமூகமேம்பாடு #அறிவியல்சிந்தனை
பாதுகாப்பு உணர்வுக்கு மட்டும் முக்கியத்துவம் தரும் ஒவ்வொரு நிமிடமும் அறுபது சந்தோஷக் கணங்களைப் பலிகொடுக்கிறோம்.
#பயணிதரன்
#வாழ்வெனும்பயணம்
#தன்மேம்பாடு #சமூகமேம்பாடு
"அறிவின் பாதையில் முன்னேற்றத்துக்குத் தடைகள் வருவது உண்டு. நம்பிக்கை என்பது இலக்கை அடைந்துவிட்டதான கற்பனை என்பதால் அங்கே பயணமே நிகழ்வது இல்லை."
#பயணிதரன்
#வாழ்வெனும்பயணம்
#தன்மேம்பாடு #சமூகமேம்பாடு #அறிவியல்சிந்தனை
"ஒரு மனிதர் மடையராவது, ஒரு வழிமுறையை—அது எவ்வளவு தண்டமாக இருந்தாலும்—சோதித்துப் பார்ப்பதால் அல்ல; அந்த வழிமுறை சோதனைகளுக்கு அப்பாற்பட்டது என்கிற பொய்யை ஏற்றுக்கொள்ளும்போது தான் மடத்தனம் உறுதிப்படுகிறது."
#பயணிதரன்
#வாழ்வெனும்பயணம்
#தன்மேம்பாடு #சமூகமேம்பாடு #அறிவியல்சிந்தனை
மேகமூட்டத்தை நம்மால் தடுக்கமுடியாது. பல நேரங்களில் சட்டென மேகம் கலைந்து வானம் வெளுக்கும் என்கிற அனுபவத்தை மனதில் நிறுத்தமுடியும்.
#பயணிதரன்
#வாழ்வெனும்பயணம்
#தன்மேம்பாடு #சமூகமேம்பாடு
"இன்னும் விடை தெரியாத கேள்விகள் உண்டு, அதில் பாதகம் இல்லை. ஆனால், தெரிந்த விடைகளைத் தூக்கி எறிந்துவிட்டு மனிதர்கள் பொய்யின் கூளங்களில் புரள்வது கண்ணராவியான விஷயம்."
#பயணிதரன்
#வாழ்வெனும்பயணம்
#தன்மேம்பாடு #சமூகமேம்பாடு #அறிவியல்சிந்தனை
மனத்துக்குப் பிரியமான முக்கியமான செயலுக்காகக் கடிகாரத்தைப் பிழிந்து கடைசி வினாடி வரை சொட்ட வைக்கும் கரங்கள் வேண்டும். அப்படிப்பட்ட கரங்கள் அரிதினும் அரிது.
#பயணிதரன்
#வாழ்வெனும்பயணம்
#தன்மேம்பாடு #சமூகமேம்பாடு
"உனக்கான விஷயங்களைப் புரிந்துகொள்வது உன் பொறுப்பு; அதைப் பிறர் கையில் கொடுத்துவிடாதே."
#பயணிதரன்
#வாழ்வெனும்பயணம்
#தன்மேம்பாடு #சமூகமேம்பாடு #அறிவியல்சிந்தனை
"அறியும் இயலால் கிடைத்த பயனுள்ள விடைகளைப் பார்த்தாலே, விடை தெரியாத கேள்விகளை எழுப்பும் செயலின் மதிப்பு புரியும்."
#பயணிதரன்
#வாழ்வெனும்பயணம்
#தன்மேம்பாடு #சமூகமேம்பாடு #அறிவியல்சிந்தனை