Shiyam Jack(@shiyamjack) 's Twitter Profileg
Shiyam Jack

@shiyamjack

Strategist | Creative Producer | Sound Healer 🥣 Nada Yoga 🧘 | Screenplay | MD Conzept Note @conzeptnoteoff !!! Student Of IPC 🎓 My Views are Personal👆🏻

ID:185747629

linkhttps://www.facebook.com/shiyamjack calendar_today01-09-2010 18:59:06

89,0K Tweets

7,5K Followers

528 Following

𝙈𝙚𝙩𝙧𝙤 𝙨𝙝𝙞𝙧𝙞𝙨𝙝(@actor_shirish) 's Twitter Profile Photo

குறள் 1311:
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.

விளக்கம்:
பெண்ணாக இருப்போர் எல்லோருமே, பொதுவாக நினைத்துக் கண்களால் உண்பதால் கற்பு நெறிகெட்ட உன் பரந்த மார்பைப் பாவை நான் தழுவ மாட்டேன்.

account_circle
Shiyam Jack(@shiyamjack) 's Twitter Profile Photo



Blockbuster content loading 🔥🔥🔥

Twist & Turns in every scenes , edge of the seat action thriller 👌🏼

After 96 , this gonna rule the box office for VijaySethupathi brother 👏🏼

Nithilan Saminathan made it a solid one 💥

account_circle
Shiyam Jack(@shiyamjack) 's Twitter Profile Photo

Only Violence Polaye 😝

Super bro , able to see some great visuals expecting soon in theatres for audience view 🔥

account_circle
𝙈𝙚𝙩𝙧𝙤 𝙨𝙝𝙞𝙧𝙞𝙨𝙝(@actor_shirish) 's Twitter Profile Photo

குறள் 1307:
ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொல் என்று.

விளக்கம்:
கூடி மயங்கிக் களித்திருக்கும் இன்பமான காலத்தின் அளவு குறைந்து விடுமோ என எண்ணுவதால் ஊடலிலும் ஒருவகைத் துன்பம் காதலர்க்கு உண்டு.

account_circle
𝙈𝙚𝙩𝙧𝙤 𝙨𝙝𝙞𝙧𝙞𝙨𝙝(@actor_shirish) 's Twitter Profile Photo

குறள் 1306:
துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று.

விளக்கம்:
பெரும்பிணக்கும், சிறுபிணக்கும் ஏற்பட்டு இன்பம் தரும் காதல் வாழ்க்கை அமையாவிட்டால் அது முற்றிப் பழுத்து அழுகிய பழம் போலவும், முற்றாத இளம் பிஞ்சைப் போலவும் பயனற்றதாகவே இருக்கும்.

account_circle
𝙈𝙚𝙩𝙧𝙤 𝙨𝙝𝙞𝙧𝙞𝙨𝙝(@actor_shirish) 's Twitter Profile Photo

குறள் 1305:
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூஅன்ன கண்ணார் அகத்து.

விளக்கம்:
மலர் விழி மகளிர் நெஞ்சில் விளையும் ஊடலே பண்பார்ந்த நல்ல காதலர்க்கு அழகு சேர்க்கும்.

account_circle
𝙈𝙚𝙩𝙧𝙤 𝙨𝙝𝙞𝙧𝙞𝙨𝙝(@actor_shirish) 's Twitter Profile Photo

குறள் 1304:
ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று.

விளக்கம்:
ஊடல் புரிந்து பிணங்கியிருப்பவரிடம் அன்பு செலுத்திடாமல் விலகியே இருப்பின், அது ஏற்கனவே வாடியுள்ள கொடியை அதன் அடிப்பாகத்தில் அறுப்பது போன்றதாகும்.

account_circle
𝙈𝙚𝙩𝙧𝙤 𝙨𝙝𝙞𝙧𝙞𝙨𝙝(@actor_shirish) 's Twitter Profile Photo

குறள் 1301:
புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது.

விளக்கம்:
ஊடல் கொள்வதால் அவர் துன்ப நோயினால் துடிப்பதைச் சிறிது நேரம் காண்பதற்கு அவரைத் தழுவிடத் தயங்கிப் பிணங்குவாயாக.

account_circle
𝙈𝙚𝙩𝙧𝙤 𝙨𝙝𝙞𝙧𝙞𝙨𝙝(@actor_shirish) 's Twitter Profile Photo

குறள் 1299:
துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி.

விளக்கம்:
துன்பம் வரும்போது அதனைத் தாங்குவதற்கு நெஞ்சமே துணையாக இல்லாவிட்டால் பிறகு யார் துணையாக இருப்பார்?

account_circle
𝙈𝙚𝙩𝙧𝙤 𝙨𝙝𝙞𝙧𝙞𝙨𝙝(@actor_shirish) 's Twitter Profile Photo

குறள் 1298:
எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

விளக்கம்:
பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.

account_circle
𝙈𝙚𝙩𝙧𝙤 𝙨𝙝𝙞𝙧𝙞𝙨𝙝(@actor_shirish) 's Twitter Profile Photo

குறள் 1297:
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு.

விளக்கம்:
அவரை மறக்க முடியாமல் வாடும் என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சத்துடன் சேர்ந்து மறக்கக் கூடாது நாணத்தையும் மறந்து விட்டேன்.

account_circle
𝙈𝙚𝙩𝙧𝙤 𝙨𝙝𝙞𝙧𝙞𝙨𝙝(@actor_shirish) 's Twitter Profile Photo

குறள் 1295:
பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.

விளக்கம்:
என் நெஞ்சத்துக்குத் துன்பம் தொடர் கதையாகவே இருக்கிறது. காதலரைக் காணவில்லையே என்று அஞ்சும்; அவர் வந்து விட்டாலோ பிரிந்து செல்வாரே என நினைத்து அஞ்சும்.

account_circle
𝙈𝙚𝙩𝙧𝙤 𝙨𝙝𝙞𝙧𝙞𝙨𝙝(@actor_shirish) 's Twitter Profile Photo

குறள் 1292:
உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.

விளக்கம்:
நெஞ்சே! நம்மிடம் அன்பு காட்டாதவர் அவர் எனக் கண்ட பிறகும், நம்மை வெறுக்க மாட்டார் என நம்பி அவரிடம் செல்கின்றாயே.

account_circle
𝙈𝙚𝙩𝙧𝙤 𝙨𝙝𝙞𝙧𝙞𝙨𝙝(@actor_shirish) 's Twitter Profile Photo

குறள் 1291:
அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது.

விளக்கம்:
நெஞ்சே! நம்மை நினைக்காமல் இருப்பதற்கு அவருடைய நெஞ்சு அவருக்குத் துணையாக இருக்கும்போது நீ எமக்குத் துணையாக இல்லாமல் அவரை நினைத்து உருகுவது ஏன்?.

account_circle