விதுரன் (@vidhuran_) 's Twitter Profile
விதுரன்

@vidhuran_

கடலளவு கிடைத்தாலும் மயங்கமாட்டேன்...அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன் 😌 ஐடி என்னோடது தான் ஆனா அட்மின் @rishIDavid_1609 இவன் 🤦

ID: 1700827841125126144

calendar_today10-09-2023 11:05:43

1,1K Tweet

253 Followers

154 Following

VagisKirubaharan (@vagishkiruba) 's Twitter Profile Photo

ஒரு பென்சில் உடைத்து பாதியை நீ தந்தாய் அன்று முதல் நட்பு பிறந்தது ஆறு வயதில் என் உலகம் இரண்டாகப் பிரிந்தது ஒன்று நீ, மற்றொன்று நான் #நாள்02 #தினம்05_கவிதைகள் #கவிதை_மாரத்தான்

ஒரு பென்சில் உடைத்து
பாதியை நீ தந்தாய்
அன்று முதல் நட்பு பிறந்தது
ஆறு வயதில்
என் உலகம் இரண்டாகப் பிரிந்தது
ஒன்று நீ, மற்றொன்று நான்
#நாள்02
#தினம்05_கவிதைகள் 
#கவிதை_மாரத்தான்
❤️ 𝑠𝑢𝑏𝒉𝑎𝑠𝑒𝑙𝑣𝑎 ❤️💫 (@subhashinisel11) 's Twitter Profile Photo

#நாள்02 #தினம்05_கவிதைகள் #கவிதை_மாரத்தான் மௌன மொழி வழியில் நடந்ததை, விழியில் கண்டதை, மனம் ஏற்க மறுக்கையில்— உள்நின்று நிகழும் போராட்டத்திற்குச் சாட்சியானது இந்த மௌன மொழி! ​— சுபா செல்வா

#நாள்02
#தினம்05_கவிதைகள்
#கவிதை_மாரத்தான்
மௌன மொழி
வழியில் நடந்ததை,
விழியில் கண்டதை,
மனம் ஏற்க மறுக்கையில்—
உள்நின்று நிகழும் போராட்டத்திற்குச் சாட்சியானது இந்த மௌன மொழி!
​— சுபா செல்வா
❤️ 𝑠𝑢𝑏𝒉𝑎𝑠𝑒𝑙𝑣𝑎 ❤️💫 (@subhashinisel11) 's Twitter Profile Photo

#நாள்02 #தினம்05_கவிதைகள் #கவிதை_மாரத்தான் தந்தை அன்பு வெறுங்காலில் நீ நடக்க - என் சிறுகால்களில் செருப்பு பூட்டி, உன் தோள்களில் என்னைச் சுகமாய் சுமந்தாயே என் தந்தையே! ​- சுபா செல்வா

#நாள்02
#தினம்05_கவிதைகள்
#கவிதை_மாரத்தான்
தந்தை அன்பு
வெறுங்காலில் நீ நடக்க - என்
சிறுகால்களில் செருப்பு பூட்டி,
உன் தோள்களில்
என்னைச் சுகமாய் சுமந்தாயே என் தந்தையே!
​- சுபா செல்வா
❤️ 𝑠𝑢𝑏𝒉𝑎𝑠𝑒𝑙𝑣𝑎 ❤️💫 (@subhashinisel11) 's Twitter Profile Photo

#நாள்02 #தினம்05_கவிதைகள் #கவிதை_மாரத்தான் முதல் நட்பு ​பெற்றோரின் கைவிட்டு... பெரும் விசும்பலுடன் பள்ளியிலே நான்! ​என் பெருவிரல் பிடித்து நின்றவள், காக்காய் கடி கடித்துத் தந்தாளே இனிக்கின்ற மிட்டாய் ஒன்றை! ​— சுபா செல்வா

#நாள்02
#தினம்05_கவிதைகள்
#கவிதை_மாரத்தான்
முதல் நட்பு
​பெற்றோரின் கைவிட்டு...
பெரும் விசும்பலுடன் பள்ளியிலே நான்!
​என் பெருவிரல் பிடித்து நின்றவள்,
காக்காய் கடி கடித்துத் தந்தாளே
இனிக்கின்ற மிட்டாய் ஒன்றை!
​— சுபா செல்வா
❤️ 𝑠𝑢𝑏𝒉𝑎𝑠𝑒𝑙𝑣𝑎 ❤️💫 (@subhashinisel11) 's Twitter Profile Photo

#நாள்02 #தினம்05_கவிதைகள் #கவிதை_மாரத்தான் இறுதிக் காதல் ​காலம் போன காலத்தில் கைத்தடியும் துணையிருக்க பக்கத்திலே அமர வைத்து பக்குவமாய் சமைத்ததை ​பொக்கை வாய்க் கிழவன் புசிப்பதை ரசிப்பாள் நாளை வருமோ எனும் ஏக்கத்தோடு அந்தக் கிழவி! ​சுபா செல்வா

#நாள்02
#தினம்05_கவிதைகள்
#கவிதை_மாரத்தான்
இறுதிக் காதல்
​காலம் போன காலத்தில்
கைத்தடியும் துணையிருக்க
பக்கத்திலே அமர வைத்து
பக்குவமாய் சமைத்ததை
​பொக்கை வாய்க் கிழவன்
புசிப்பதை ரசிப்பாள்
நாளை வருமோ எனும்
ஏக்கத்தோடு அந்தக் கிழவி!
​சுபா செல்வா
❤️ 𝑠𝑢𝑏𝒉𝑎𝑠𝑒𝑙𝑣𝑎 ❤️💫 (@subhashinisel11) 's Twitter Profile Photo

#நாள்02 #தினம்05_கவிதைகள் #கவிதை_மாரத்தான் வலியின் வார்த்தை ​மங்கலநாண் ஏந்தி, மன்னவன் கரம்பிடித்து மங்கை அவள் கிளம்புகையில் - வடித்த கண்ணீரும் சொல்லிடுமே கதைகள் பல! ​அத்தனையும் மறைத்து, புன்னகை முகத்தோடு புகுந்திடுவாள் புது வீட்டில் - அடியெடுத்து! சுபா செல்வா

#நாள்02
#தினம்05_கவிதைகள்
#கவிதை_மாரத்தான்
வலியின் வார்த்தை
​மங்கலநாண் ஏந்தி, மன்னவன் கரம்பிடித்து
மங்கை அவள் கிளம்புகையில் - வடித்த கண்ணீரும்
சொல்லிடுமே கதைகள் பல!
​அத்தனையும் மறைத்து, புன்னகை முகத்தோடு
புகுந்திடுவாள் புது வீட்டில் - அடியெடுத்து!
சுபா செல்வா
உன்னவள் (@unnaval_naan) 's Twitter Profile Photo

படைபெருகும் கடலலை மோதினும் , தள்ளாடாது கரைசேரும் உறுதி நாவாயின் நம்பிக்கை! ​வாழ்க்கைப் பெருவெளி எங்கிலும் ,நமக்குள் சூழும் இருள்விலக்கும் சுடரே நம்பிக்கை! #நாள்03 #தினம்05_கவிதைகள் #கவிதை_மாரத்தான்

உன்னவள் (@unnaval_naan) 's Twitter Profile Photo

ஆழிதனில் வீழ்ந்த மழையெனப் போயினும் ஆழியில் முத்தாய் அவிழ்ந்த கனவு! கானல் வரிசேர் கழனிப் பொழுதாய்ப் போன பொழுதெல்லாம் புன்னகைச் சுவடு! #நாள்03 #தினம்05_கவிதைகள் #கவிதை_மாரத்தான்

உன்னவள் (@unnaval_naan) 's Twitter Profile Photo

தளையவிழ்ந்த தண்மலராய் - உன் உள்ளம் விரிவதே விடுதலை! ​சிறைதகர்த்த செம்புனலாய் - உன் சினம் கடப்பதே விடுதலை! ​விலங்குடைக்கும் வேகம் அன்று - உன் விலகிநிற்கும் அமைதி! ​உன்னை நீயே ஆளுதல் - அதுவே மன்னும் மகா விடுதலை! #நாள்03 #தினம்05_கவிதைகள் #கவிதை_மாரத்தான்

Sathya Karthik (@sathyakarthik_) 's Twitter Profile Photo

நாகரிக சக்கரத்தின் நாடித் துடிப்பு நில்லாமல் ஓட நரம்புகளில் பாயும் நவீன ரத்தம் மின்சாரம் #கவிதை_மாரத்தான் #நாள்006 051

நாகரிக சக்கரத்தின்
நாடித் துடிப்பு நில்லாமல் ஓட
நரம்புகளில் பாயும்
நவீன ரத்தம்
மின்சாரம்

#கவிதை_மாரத்தான்
#நாள்006    051
Sathya Karthik (@sathyakarthik_) 's Twitter Profile Photo

சுற்றி சுழலும் சத்தங்களை சட்டை செய்யாமல் பத்து நிமிடம் - ஒரு ரயில்நிலையித்தில் சலனமின்றி உட்கார்ந்து இருந்தால் புத்தன் ஆகலாம் குறைந்தபட்சம் கவிஞன் ஆகலாம் இரண்டும் ஒன்றே #கவிதை_மாரத்தான் #நாள்006 0052

சுற்றி சுழலும்
சத்தங்களை
சட்டை செய்யாமல்
பத்து  நிமிடம் - ஒரு  ரயில்நிலையித்தில்
சலனமின்றி
உட்கார்ந்து இருந்தால்
புத்தன் ஆகலாம்
குறைந்தபட்சம்
கவிஞன் ஆகலாம்
இரண்டும் ஒன்றே

#கவிதை_மாரத்தான்
#நாள்006  0052
Sathya Karthik (@sathyakarthik_) 's Twitter Profile Photo

தப்பாட்டம் முழங்க கரகாட்டம் ஒயிலாட்டம் பூமி அதிர சாமி வரும் வீதியெங்கும் சந்தனமும் குங்குமமும் கதம்பமல்லி மரிக்கொழுந்து சூடி முளைப்பாரி சுமந்து வரும் மங்கையரின் வியர்வை மணக்கும் திருவிழா #கவிதை_மாரத்தான் #நாள்006 053

தப்பாட்டம் முழங்க
கரகாட்டம் ஒயிலாட்டம்
பூமி அதிர
சாமி வரும் வீதியெங்கும்
சந்தனமும் குங்குமமும் 
கதம்பமல்லி
மரிக்கொழுந்து சூடி
முளைப்பாரி சுமந்து வரும் மங்கையரின்
வியர்வை மணக்கும் திருவிழா

#கவிதை_மாரத்தான் 
#நாள்006   053
Sathya Karthik (@sathyakarthik_) 's Twitter Profile Photo

மனிதன் தன்னை மனிதனாக உணர்வதும் இன்னொரு மனிதனை கடவுளாக வணங்குவதும் ஓரே இடம் - மருத்துவமனை #கவிதை_மாரத்தான் #நாள்006 054

மனிதன் 
தன்னை
மனிதனாக
உணர்வதும்
இன்னொரு மனிதனை
கடவுளாக 
வணங்குவதும்
ஓரே இடம் - மருத்துவமனை 

#கவிதை_மாரத்தான் 
#நாள்006  054
Sathya Karthik (@sathyakarthik_) 's Twitter Profile Photo

தார் ரோடு இடுபவனும் அளந்து பார்க்கும் அதிகாரியும் பொறியாளனும் தொழிலாளி. சுத்தியல் மட்டுமல்ல அறிவும் ஆயுதம். வியர்வை சிந்துபவனும் சிந்தனை வியர்ப்பவனும் தொழிலாளி. #கவிதை_மாரத்தான் #நாள்006 055

தார் ரோடு இடுபவனும்
அளந்து பார்க்கும் அதிகாரியும் பொறியாளனும்
தொழிலாளி.
சுத்தியல் மட்டுமல்ல
அறிவும் ஆயுதம்.
வியர்வை சிந்துபவனும்
சிந்தனை வியர்ப்பவனும்
தொழிலாளி.
#கவிதை_மாரத்தான் 
#நாள்006  055
Sathya Karthik (@sathyakarthik_) 's Twitter Profile Photo

மின்மினி பூச்சிகள் மின்சாரம் பாய்ச்சுவதில்லை #கவிதை_மாரத்தான் #நாள்006 056

மின்மினி பூச்சிகள் 
மின்சாரம் பாய்ச்சுவதில்லை

#கவிதை_மாரத்தான் 
#நாள்006  056
Sathya Karthik (@sathyakarthik_) 's Twitter Profile Photo

பத்திரமக சென்றுவா என்று விடைக்கொடுக்கவும் கை அசைக்கிறோம் இதோ இங்கிருக்கிறேன் ஓடிவா என வரவேற்கவும் கையசைக்கிறோம் இன்பமும் துன்பமும் ரயில்நிலையத்தின் லப்டப் #கவிதை_மாரத்தான் #நாள்006 057

பத்திரமக
சென்றுவா என்று விடைக்கொடுக்கவும்
 கை அசைக்கிறோம்

இதோ இங்கிருக்கிறேன்
ஓடிவா என வரவேற்கவும்
கையசைக்கிறோம்

இன்பமும் துன்பமும் ரயில்நிலையத்தின் லப்டப் 
#கவிதை_மாரத்தான் 
#நாள்006  057
Sathya Karthik (@sathyakarthik_) 's Twitter Profile Photo

வேப்பிலையும் மாவிலையும் தோரணத்தில் சிரிக்கும் பூச்சூடி பொட்டுவெச்ச ஒய்யார தேர் ஊரெல்லாம் பவனி வரும் திருவிழாவை எதிர்பார்த்து காத்திருப்பது எங்க ஊரு சாமி மட்டுமில்ல... என் தாத்தா பாட்டியும் தான் #கவிதை_மாரத்தான் #நாள்006 058

வேப்பிலையும் மாவிலையும்
தோரணத்தில்
சிரிக்கும் 

பூச்சூடி பொட்டுவெச்ச
ஒய்யார தேர்
ஊரெல்லாம்
பவனி வரும்
திருவிழாவை

எதிர்பார்த்து காத்திருப்பது
எங்க ஊரு சாமி மட்டுமில்ல...
என் தாத்தா 
பாட்டியும் தான்

#கவிதை_மாரத்தான் 
#நாள்006  058
Sathya Karthik (@sathyakarthik_) 's Twitter Profile Photo

பிறப்பும் இறப்பும் இறைவன் செயல் -எனில் ஜனனம் நடத்தவும் மரணம் தடுக்கவும் இடையில் நடப்பதெல்லாம் மருத்துவமனைப் படிகளில்... #கவிதை_மாரத்தான் #நாள்006 059

பிறப்பும் இறப்பும்
இறைவன் செயல் -எனில்
ஜனனம் நடத்தவும்
மரணம் தடுக்கவும்
இடையில் நடப்பதெல்லாம்
மருத்துவமனைப் படிகளில்...

#கவிதை_மாரத்தான் 
#நாள்006  059